Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 வயதில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன் !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (10:58 IST)
திமுகவின் பொதுச்செயலாளர் க அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

திமுகவிற்கு இது முக்கியமான தேர்தல் கலைஞர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். அதன் பொதுச்செயலாளரும் முத்த தலைவருமான க அன்பழகன் உடல்நலக் குறைவால் தேர்தல் பணிகளில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்துவரும் அன்பழகன் இன்று தேர்தலை முன்னிட்டு சக்கரநாற்காலியில் வாக்களிக்க வந்தார். தென் சென்னை தொகுதியில் வரும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் அவரைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். அன்பழகன் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments