சென்னை சூளைமேட்டில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு – வாக்குப்பதிவு தாமதம் !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (10:11 IST)
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் வேளையில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக இதுவரை 10 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஆனால் சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிககப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள 8,9 மற்றும் 10 ஆகிய வாக்குச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது.

இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் எனவும் தாமதத்துக்குக் காரணமாக வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments