Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறி கொள்ளையடிக்கும் அமேசான், ஃபிளிப்கார்ட்? – விற்பன்னர்கள் குற்றசாட்டு!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (19:10 IST)
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பொருட்கள் விற்பனை செய்வதில் விதிமுறைகளை மீறுவதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பதில் முன்னனி வகிக்கும் நிறுவனங்கள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட். நேரடி அன்னிய முதலீட்டின் மூலம் இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்கள் விழாக்காலங்களில் 4 நாட்கள் விழாக்கால விற்பனையை நடத்துவது வழக்கம். கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடத்திய விற்பனையில் இந்த இரண்டு நிறுவனங்களும் சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன.

பெரும்பாலும் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், அழகு பொருட்கள் அதில் அதிகம் விற்பனையாகி உள்ளது. அமேசான் போன்ற அன்னிய முதலீடு நிறுவனங்களுக்கு விற்பனை இலக்கு இருப்பதாகவும் அதை மீறி பல கோடி ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்து வருவதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிதாக வெளியிடப்படும் மொபைல் போன்களை ஆன்லைனிலேயே சலுகை விலைக்கும், வட்டியில்லா தவணை முறையிலும் விற்று விடுவதால் நகரங்களில் செல்போன் விற்பனை கடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சரியான முடிவுகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்கள் சங்கம் அமேசான் மூலம் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமேசான் தரப்பிலோ விதிமுறைகளுக்கு உட்பட்டே பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். லாப இலக்கை கணக்கில் கொண்டுதான் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விற்பனை தொகை ஆயிரம் கோடிகளில் இருந்தாலும் அது அமேசான் மூலம் பொருட்களை விற்பவர்கள் பெரும் லாபமாகதான் கருதப்படும் என கூறியிருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments