Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பின் கோஹ்லியின் உருக்கமான பேச்சு: வைரலாகும் வீடியோ!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:15 IST)
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான முக்கியமான எலிமினாட்டர் போட்டியில் நூலிழையில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே பெங்களூரு அடித்து இருந்தாலும் அந்த ரன்களை அடிக்க ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் வரை தேவைப்பட்டது 
 
பெங்களூர் அணியின் அசத்தலான பந்து வீச்சை கொண்டிருந்தும் கடைசி ஓவரில் கோட்டை விட்டதால் பெங்களூரு அணி தோற்று விட்டது. இந்த நிலையில் தோல்வியடைந்த பின்னர் வீரர்களிடம் அணித்தலைவர் விராட் கோலி உருக்கமாக பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
அதில் கோஹ்லி கூறியதாவது ’இந்த சீசனில் நாம் சரியான வகையில் தான் செயல்பட்டு ஒரே அணியாக இணைந்து விளையாடினோம். இதற்கு முந்தைய சீசனை விட இந்த சீசனில் நாம் நன்றாக தான் விளையாடினோம். நம்முடைய அணுகுமுறையும் பாசிட்டிவ் ஆக இருந்தது
 
இந்த எட்டு வார காலம் குடும்பத்தை மறந்து ஒரு அணியாக அனைவரும் இணைந்து பயணித்தோம் குறிப்பாக சிராஜ், படிக்கல் ஆகிய அற்புதமான வீரர்கள் நமக்கு கிடைத்துள்ளனர். பயிற்சியாளர்கள் மற்றும் அணிய நிர்வாக ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றி
 
நமது ரசிகர்கள் எலுமினேட்டர் போட்டியை கடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள் ஆனால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற ஒரு மனக்குறை மட்டும் உள்ளது. இருப்பினும் நேர்மறை அனுபவங்களை எடுத்துக் கொண்டு அடுத்த சீசனில் அதனை சரி செய்வோம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments