Publish Date: Sat, 17 Oct 2020 (16:15 IST)
Updated Date: Sat, 17 Oct 2020 (16:16 IST)
பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி தனது அணியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறார்.
இதில் 8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 69 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. முந்தைய போட்டியில் சில தவறுகளால் தோல்வியை தழுவிய கோலி அணி இன்றைய போட்டியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. முகமது சிராஜுக்கு பதிலாக சபாஷ் அகமது மற்றும் ஷிவம் துபேவுக்கு பதிலாக குர்கீரத் சிங் மான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் கோலிக்கு வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
webdunia
Publish Date: Sat, 17 Oct 2020 (16:15 IST)
Updated Date: Sat, 17 Oct 2020 (16:16 IST)