சாம் கரணும் ஜடேஜாவும் போதும்… மற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்க – சமூகவலைதளங்களில் எழுந்த குரல்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:14 IST)
சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாம் பிரியாவிடை கொடுத்து புதிய அணியைக் கட்டமைக்க வேண்டுமென்ற குரல் எழுந்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த தோல்விகளால் சிஎஸ்கே அணி கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அணியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதால் அணிக்கும் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

அதனால் தோனி மற்றும் பிளமிங் ஆகியவர்கள் தாங்களாகவே பதவி விலகவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில்  ’ஜடேஜா, சாம் கரணை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புங்க்ள்.. புதிய நம்பிக்கைகளுடன் புதிய தொடக்கமாக இருக்கட்டும்’ என்பது போன்ற பதிவுகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments