வாட்சன் அபார ஆட்டம்: சிஎஸ்கே அணி வெற்றி!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (23:27 IST)
சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 83 ரன்களும், வார்னர் 57 ரன்களும் எடுத்தனர்.
 
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி முதல் ஓவரை மெய்டன் ஓவராக மாற்றினாலும், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. டூபிளஸ்சிஸ் எதிர்பாராதவிதமாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் வாட்சன் இன்று ருத்ரதாண்டவம் ஆடி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டினார். 53 பந்துகளில் 96 ரன்கள் அடித்த வாட்சன் புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆனார்.

இருப்பினும் சிஎஸ்கே அணி 19.5  ஓவரில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 16 புள்ளிகள் எடுத்து சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments