176 ரன்கள் இலக்கு: சொந்த மண்ணில் சாதிக்குமா சிஎஸ்கே?

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (22:10 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் மனிஷ் பாண்டே மிக அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 83 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஒப்பனர் வார்னரும் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியின் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுக்களையும் தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் 176 இலக்கு என்பது கொஞ்சம் கடினமான ஒன்றே. அதிலும் மூன்றாவது ஓவரிலேயே டூபிளஸ்சிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகிவிட்டதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா தற்போது பொறுப்புடன் விளையாடி வருவதால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சிஎஸ்கே அணி சற்றுமுன் வரை 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது
 
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே இருப்பதால் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments