Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை அணி? ஐதராபாத்துடன் இன்று மோதல்

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (11:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஐதராபாத் (18 புள்ளி), சென்னை (18 புள்ளி), கொல்கத்தா(16 புள்ளி) மற்றும் ராஜஸ்தான் (14 புள்ளி) ஆகிய அணிகள்  பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்த நிலையில், இன்று 7.00 மணிக்கு வான்கடே மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும், தோல்வியடைந்த அணி நாளை நடைபெறும் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் வெற்றியடைந்த அணியுடன் மீண்டும் மோதும்.
 
இதுவரை சென்னை அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐதராபாத் அணி 3 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments