ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய போலீஸ் அதிகாரி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (07:45 IST)
குஜராத்தில் ஜடேஜாவின் மனைவி ரிவபாவை போலீஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
 
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில், ஜடேஜாவின் மனைவி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் இரு சக்கர வாகனம் மீது தெரியாமல் மோதியுள்ளார்.
 
இதனால் கடும்கோபமடைந்த அந்த கான்ஸ்டபிள் காரிலிருந்த ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த ஜடேஜாவின் மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ஒரு பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments