பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன்! மகரஜோதியை காண குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

Prasanth Karthick
திங்கள், 15 ஜனவரி 2024 (09:17 IST)
இன்று சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர்.



சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதுமுதலாக ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு நடந்தே சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்ஐயப்பன் கோவிலில் சிகர நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

இன்று அதிகாலை 2.46 மணிக்கே நடை திறக்கப்பட்டு மகர சங்ரம சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானம் கொண்டு வரப்படும் திருவாபரணத்தை அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவார்கள்.

அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வரிவில் 3 முறை காட்சி அளிப்பார். அதை காண ஏராளமான பக்தர்கள் இன்று சபரிமலையின் பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பனின் அருள் பெற வேண்டுமா? இதோசக்திவாய்ந்த மந்திரங்கள்

பாலகிரி மலை முருகன்: சங்கடங்கள் தீர்க்கும் சுயம்பு வடிவம்!

மயிலாப்பூரில் ஸ்ரீ சத்ய சாயி பகவானின் 'ப்ரேம ரத பவனி' உலா! சென்னை, மயிலாப்பூர்:

விபூதியால் தோன்றிய கோரக்கச் சித்தர்: காயகல்பச் செடி உருவான கதை

திருக்கார்த்திகை: பரணி தீபம் ஏற்றி முருகனை வழிபடும் மகத்துவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments