Publish Date: Mon, 08 Apr 2024 (19:30 IST)
Updated Date: Mon, 08 Apr 2024 (19:31 IST)
இன்று பங்குனி மாத சர்வ அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திதி தர்ப்பணம் மற்றும் திலோகோமம் கொடுத்து மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். அதன்பின் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினர். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று பங்குனி மாத சர்வ அமாவாசை தினத்தை முன்னிட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான பக்தர்கள் வந்ததால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ஆண்டு பங்குனி மாத சர்வ அமாவாசைக்கு ராமேஸ்வரத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்