நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (10:50 IST)
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் சற்றுமுன் 630 புள்ளிகள் சரிந்து 76,445 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 152 புள்ளிகள் சரிந்து 23,196 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஐடிசி, எச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ, பிரிட்டானியா, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன. அதேபோல், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும், அதனால் முதலீடு செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments