Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் ஏசியா இயர் எண்ட் சலுகை: பயண கட்டணம் குறைப்பு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:59 IST)
ஏர் ஏசியா நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஏர் ஏசியா நிறுவனம் இயர் எண்ட் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு பயணத்திற்கு ரூ.1,299 மற்றும்  வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2,399 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகையை கொண்டு வரும் 15 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம். பயணத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ளலாம்.
 
உள்நாட்டு பயணத்தில் பெங்களூரு, ராஞ்சி, ஐதராபாத், புனே, கொல்கத்தா, கொச்சி, டெல்லி ஆகிய இடங்கள் அடங்குகின்றன. 
 
மேலும், வெளிநாட்டு பயணத்தில் கோலாலம்பூர், பாலி, பாங்காக், க்ராமி, புகெட், மெல்பெர்ன், சிட்னி, சிங்கப்பூர், ஆக்லாந்து உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்லலாம்.
 
இந்த சலுகை எல்லா விமானங்களிலும் அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. புக் செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான ரத்து கட்டணமும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments