Publish Date: Tue, 10 Feb 2009 (12:23 IST)
Updated Date: Tue, 10 Feb 2009 (12:23 IST)
மலேசியாவில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
ஜோஹர், கோலாலம்பூர், பினாங் ஆகிய 3 நகரங்களில் முறையே பிப்ரவரி 21ஆம் தேதி, 22ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதன் மூலம் வசூலாகும் நிதி, அனாதை ஆசிரமத்துக்கு உதவவும், கட்டடம் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
சின்னத்திரை நடிகர், நடிகையர் கமலேஷ், சுரேஷ்வர், தீபக், ராஜ்காந்த், அர்ச்சனா, அம்மு, கவி, திவ்ய தர்ஷினி உட்பட பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த கலை நிகழ்ச்சியில் ஒய்.ஜி. மகேந்திரனின் நகைச்சுவை நாடகமும், நடிகை நிகிதாவின் நடனமும் இடம்பெறுகிறது.