Publish Date: Tue, 12 Aug 2008 (12:01 IST)
Updated Date: Tue, 12 Aug 2008 (12:00 IST)
சின்னத்திரைத் தொடர்களில் வில்லியாக நடித்து வந்த நடிகை புவனேஸ்வரியை கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடியவில்லை. காரணம் கேட்டால், அவர் தெலுங்கில் சினிமா மற்றும் தொடர் தயாரிப்பாளராகிவிட்டாராம்.
ஈ டிவியில் ஒளிபரப்பாகி வரும் நு லேனு காவ்யா என்ற தொடர் இவரது சொந்தத் தயாரிப்பாம். தொடரோடு நின்றுவிடாமல் தெலுங்கில் படமும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தயாரிப்பில் வெளிவந்த குர்க்குரே தெலுங்குப் படத்தை அடுத்து படத் தயாரிப்பில் இறங்கி விட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் புவனேஸ்வரி.