Publish Date: Thu, 15 Nov 2007 (10:40 IST)
Updated Date: Thu, 15 Nov 2007 (10:40 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
சூரசம்ஹாரம் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள திருச்செந்தூரில் இந்த விழா மிகப் பிரசித்தம். அங்கு இன்று மாலை சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கே திறக்கப்பட்டது.
1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியன நடந்தது. மாலையில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகிறார்கள்.
இன்று மாலை 4 முதல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிரப்பு செய்கிறது.