Publish Date: Fri, 23 Sep 2011 (17:13 IST)
Updated Date: Sat, 30 Jun 2007 (15:07 IST)
பெசன்ட் நகரில் இருக்கும் கடற்கரை மிகவும் அழகானதாகும். எப்போதும் காதலர்கள் கூட்டம் அதிகமாகக் கணாப்படும் இந்த கடற்கரை தற்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரும் தூரத்தில்தான் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அஷ்டலஷ்மி கோயில் மற்றும் கிறித்துவ தேவாலயங்கள் உள்ளன.
தற்போது அங்கு அறுபடை முருகன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதுவும் புகழ்பெற்று வருகிறது.