Publish Date: Thu, 21 May 2009 (12:21 IST)
Updated Date: Thu, 21 May 2009 (12:21 IST)
கேரள சுற்றுலாத் துறை மற்றும் ஜெட் ஏர்வேஸ் இணைந்து மும்பையில் இருந்து கேரளாவின் 3 நகரங்களுக்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
தென் இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக கேரளா விளங்கி வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப கூடுதல் போக்குவரத்து வசதிகளை அளிக்க கேரளா சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஜெட் ஏர்வேசுடன் இணைந்து விமான சேவையை அதிகரித்துள்ளது. மும்பையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிகோடு ஆகிய 3 இடங்களுக்கு புதிய விமான சேவை இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய கூடுதல் விவரங்களை கேரளாடூரிசம்.ஓஆர்ஜி மற்றும் ஜெட்ஏர்வேஸ் ஆகிய இணையதளங்களில் அறியலாம். விமான அனுமதி டிக்கெட்களையும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.