Entertainment Tourism Religious 0812 29 1081229015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

Advertiesment
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொ‌ர்‌க்கவாச‌‌ல் ‌திற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெறு‌ம்.

108 வைணவ தலங்களில் முதன்¨யானது திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.

இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நேற்று இரவு 7 மணிக்கு ரங்கநாதர் மூலஸ்தனத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்ற 21 நாட்கள் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் நம்பெருமாளுக்கு பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

வரும் 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil