Publish Date: Tue, 21 Aug 2007 (17:28 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
(வீரப்பன் உயிரோடு இருக்கும்போது)
ஷங்கர் மாதவனும் சந்தன கடத்தல் வீரப்பனும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் பார்க்க போறாங்க.
படத்தில் சந்தனத் தென்றலை.... பாட்டு பார்த்துட்டு வீரப்பன் ஒரே குஷியாயிட்டார்.
சங்கர் மாதவன் கிட்ட வீரப்பன் சொல்றாரு, நீ ஏன் இந்த பாட்டை என்ன வச்சி பாடக் கூடாதுன்னு?
உடனே சங்கர் மாதவன் இப்படி பாடுறாரு...
சந்தன தென்றலை வீரப்பன் கடத்துதல் நியாயமா? நியாயமா?
கவர்மென்ட் கேள்விக்கு வீரப்பன் பதில் என்ன மெளனமா? மெளனமா?
அன்பே உந்தன் மீசை முறுக்க நொடி ஒன்று போதுமே....
அதை நீயும் ஷேவ் பண்ணதானே ஒரு ஆயுள் வேண்டுமே....?
அவ்ளோதான்... பாட்ட கேட்ட வீரப்பன் ரொம்ப சந்தோஷமாகி சங்கர் மாதவனுக்கு ஒரு பெரிய சந்தன மரக்கட்டையை பரிசாக அளிக்கிறார்.
(ஏன்டா... செத்தவனக் கூட விட மாட்டீங்களான்னு கேட்கறீங்க தானே?!)