Publish Date: Fri, 07 Nov 2008 (10:48 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (10:47 IST)
தொலைக்காட்சியில் ஃபியர் பேக்டர் என்ற ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தது தெரியும். அதன் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க உள்ளது. அக்ஷய் குமார்தான் நிகழ்ச்சியை நடத்துகிறார். விஷயம் அதுவல்ல. இந்த நிகழ்ச்சிக்காக அவர் வாங்கப் போகும் சம்பளம்.
ஃபியர் பேக்டர் முதல் பகுதியின் போது ஒரு எபிசோடுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் அக்ஷய். இப்போது அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. அதனால் இரண்டரை கோடி டிமாண்ட் செய்துள்ளார். மறு பேச்சில்லாமல் ஓகே சொல்லியிருக்கிறது டிவி நிறுவனம்.
டென் கா டமாக்கா நிகழ்ச்சிக்காக சலமான் கானுக்கு 104 எபிசோடுகளுக்கு 89 கோடிகளே வழங்கப்பட்டது. அதேபோல் ஷாருக் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளத்தைவிட அக்ஷயின் சம்பளம் மிக அதிகம்.
கான்களை குமார் முந்தியிருப்பதும் ஒரு சாதனைதான்.