Publish Date: Wed, 07 Jan 2009 (19:56 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (16:41 IST)
இந்திப் படங்களின் வியாபார எல்லை விரிவடைந்த அளவுக்கு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. நடிகர் அக்சய் குமாரின் சம்பளம் எழுபது கோடிகளை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அவருடைய சம்பளம் மட்டுமல்ல அனைவரின் சம்பளமும் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. பாடகர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவர்களும் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.
இன்றைய பாலிவுட் நிலவரப்படி அதிக சம்பளம் பெறும் பாடகர் பாப் இசைக் கலைஞர் தலேர் மெஹந்தி. ஒரு பாடருக்கு இவர் வாங்கும் சம்பளம் ஐந்து லட்சம். சும்பளத்தை உயர்த்திய பின், இது நியாயமான ஊதியம்தான் என்று கருத்து தெரிவித்துள்ளார் தலேர்.
வாங்குகிறவர்களுக்கு எல்லாமே நியாயம்தான்.