Publish Date: Sun, 20 Apr 2008 (17:58 IST)
Updated Date: Sun, 20 Apr 2008 (17:58 IST)
கேசட் நிறுவனம் முழுவீச்சில் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. இவர்கள் தயாரிப்பில் மலையாள நாயர் நடிகை ஒரு படம் நடிக்கிறார். விஷயம் படத்தின் இயக்குநரைப் பற்றியது. விஷமக்கார எழுத்தாளரான இந்த அறிமுக இயக்குநர், பாடல் எழுதவந்த கவிஞரிடம் ஆயிரம் சரணம் எழுதிவரச் சொல்லி அதிர வைத்திருக்கிறார். இதே பாணியில் பிளவர் படத்துக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளரிடம் ஐநூறு ஆயிரம் டியூன் போட்டு வைங்க என்று கூற, கடுப்பான இசையமைப்பாளர் வெளியே போடா என்று ஒருமையில் பேசிக் கதவை அடைத்திருக்கிறார். படம் முடியும் முன் இயக்குநரின் கன்னம் பழுத்துவிடும் என்கிறார்கள்.