Publish Date: Tue, 26 Feb 2008 (19:35 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (19:34 IST)
பூஜைக்கு வந்த புத்தம்புது மலர்போல் இருக்கும் நடிகையை கொஞ்ச நாள் கோடம்பாக்கம் பக்கமே காணவில்லை. இப்போது திடீரென்று ஆண்டவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை தலைமறைவாக இருந்த நாளில் என்ன நடந்தது என்பதுதான் கோடம்பாக்க டீ ஸ்டால்களில் இப்போதைய ஹாட் டாபிக். காதலனுடன் ஏற்பட்ட தொடர்பில கர்ப்பமாமிக, ரகசியமாக குழந்தை பெற்றுவிட்டு சைலண்ட்டாக ·பீல்டுக்கு வந்துவிட்டார் என்றொரு வதந்தி!
இயக்குனர் கணவரை உதறிவிட்டு ராமனின் பத்தினி தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். இவருக்கு அருகில்தான் வசிக்கிறார், கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கும் கண்ணன் பக்தை நடிகை. பின்னவருக்கு விவாகரத்து விஷயங்களில் ஆலோசனையும், தன்னம்பிக்கையும் முன்னவர்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அனுபவத்தில் கிடைத்த ஞானம்தான்!
யாரும் கிடைக்காமல்தான் வேறு வழியின்றி கண்ணழகியை உச்ச நடிகரின் கெஸ்ட் ரோல் படத்தில் ஒப்பந்தம் செய்தனர். உச்சத்துடன் சேர்ந்து நடித்த என் மகளுக்கு இப்படியொரு கதியா என இயக்குனரிடம் கண்ணழகியின் மம்மி கண்ணைக் கசக்கி கணிசமான அளவு எக்ஸ்ட்ரா அமெளண்ட் கறந்துவிட்டாராம். நடிகையின் அம்மாக்களின் கண்ணீருக்கும் காசுக்கான மவுசு இருக்கவே இருக்கிறது.