Publish Date: Tue, 08 Jan 2008 (13:29 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (13:29 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோலே கிட்மேன் தான் கருவுற்றிருப்பதை நீண்ட இடைவெளிக்கு பின்னர் உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு கிட்மேன், கெய்த் உர்பனின் குழந்தைக்குத் தாயாக விரும்புவதாக ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து நாளிதழான டெய்லி மெயில் நிக்கோலே கிட்மேன் தான் கருவுற்றிருப்பதாக தனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தெரிவித்ததாக முதலில் செய்தி வெளியிட்டது.
அப்போது இத்தகவலை மறுத்த கிட்மேன், இது முற்றிலும் தவறான தகவல் என்று கூறியிருந்தார். நிக்கோலே கிட்மேன் கருவுற்றிருப்பதாக செய்திகள் வெளிவரக் காரணம், அவர்கள் இருவரும் என்.எஸ்.டபிள்யூ ஆர்ட் கேலரிக்கு சென்று குழந்தைகளுக்கு பயன்படும் பொருட்களை வாங்கியதுதான். இதனிடையே நிக்கோலே கிட்மேன், கெய்த் உர்பன் தம்பதியினர் குழந்தை பிறப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும், அத்தம்பதியினர் மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் பி.பி.சி. தெரிவித்தது.
ஒருவழியாக நிக்கோலே கிட்மேன், தான் கருவற்றிருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் வெண்டி டே உறுதி செய்துள்ளார். கிட்மேனுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் முன்பு நடிகர் டாம் குருஷியை திருமணம் செய்து கொண்ட போது, இசபெல்லா, கணுர் என்று இரண்டு குழந்தைகளைத் தத்து எடுத்து இன்றும் அவர்களை வளர்த்து வருகின்றார்.