Publish Date: Mon, 09 Feb 2009 (16:57 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (16:56 IST)
அடுத்த வேட்டைக்கு தயாராகிவிட்டார் விஜய். விரையில் விஜயின் புதுப்படம் வேட்டைக்காரன் ஆரம்பமாகிறது. அதற்குமுன் சில அத்தியாவசிய மாற்றங்கள் நடந்து வருகின்றன.
வில்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் வேட்டைக்காரனுக்கு ஒளிப்பதிவு செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது எந்த விளக்கமும் இல்லாமல் அவரை படத்திலிருந்து விடுவித்திருக்கிறார்கள்.
வேட்டைக்காரனுக்கு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் கோபிநாத். கில்லி, குருவி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ரவிவர்மன் மாஸ்கோவின் காவிரி படத்தை முடிக்க வேண்டியிருப்பதால் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.
வேட்டைக்காரனுக்காக படத்தில் ஒப்பந்தமான முதல் நாளே வேலையை துவக்கியவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்சமயம் கம்போஸிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.