Publish Date: Fri, 30 Jan 2009 (15:55 IST)
Updated Date: Fri, 30 Jan 2009 (15:54 IST)
மல்லி, டெரரிஸ்ட், தஹான் படங்களை இயக்கிய சந்தோஷ் சிவன் அடுத்து இயக்கப் போகும் படம் ஈழப் பிரச்சனையை பின்னணியாகக் கொண்டது. சந்தோஷ் சிவனுடன் அவரது சகோதரர் சஞ்சீவ் சிவனும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.
சந்தோஷ் சிவனின் ரசிகர்கள் வட்டம் பெரியது, உலகம் முழுவதும் பரந்து விரிந்தது. இவரது மல்லி, டெரரிஸ்ட், தஹான் படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.
இதன் காரணமாக ஈழப் போராட்டம் குறித்த படமும் சர்வதேச சமூகத்தை சென்றடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு நம்பிக்கையளிக்கும் செய்தி.
இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை உன்னதம் சிற்றிதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான கௌதம சித்தார்த்தன் எழுதுகிறார். எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சி. மோகன் வரிசையில் சினிமாவுக்கு வரும் நான்காவது சிறு பத்திரிகை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.