Publish Date: Sat, 24 Jan 2009 (15:56 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:38 IST)
ஈரமும், வீரமும் மோகன்பாபுவின் இரு முகங்கள். இவர் கோபப்பட்டால் கண் சிவக்கும், உணர்ச்சிவசப்பட்டால் கண் பனிக்கும். மகன் நடித்த என்னை தெரியுமா படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்த மோகன்பாபுவின் கண் பனித்தது, உணர்ச்சிமிகுதியால்.
மோகன்பாபுவின் இளைய மகன் மனோஜ்குமார் நடித்திருக்கும் படம் என்னைத் தெரியுமா? இதன் ப்ரீயமியர் ஷோவுக்காக சென்னை வந்த மோகன்பாபு நிரூபர்கள் மத்தியில் பேசினார்.
“என்னுடைய தாய் வீடு தமிழ்நாடு. நான் நடிகனானது இங்கேதான். நான் அரசியலுக்கு வந்ததும் சென்னையில் இருந்த போதுதான். என்னை ஆளாக்கிய தமிழ் மக்களிடம் என்னுடைய மகனையும் ஒப்படைத்திருக்கிறேன். தமிழ் மக்கள்தான் என்னுடைய தெய்வம்”
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியிருக்கும் என்னை தெரியுமா படத்தில் ரியா சென், சினேகா உல்லால் ஆகியோரும் நடித்துள்ளனர்.