Entertainment Film Featuresorarticles 0901 23 1090123071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேரன் சொன்ன நோ

Advertiesment
சேரன் பொக்கிஷம் ராமன் தேடிய சீதை ஜெகன்நாத் ரீமேக்
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:56 IST)
பொக்கிஷத்தை பூதம் காப்பதுபோல் என்பார்கள் கிராமப்புறத்தில். இனி சேரன் காப்பதுபோல் என்று மாற்றிக் கொள்ளலாம். அந்தளவுக்கு படத்தை பொற்கொல்லனைப் போல் ப்ரேம் பை ப்ரேம் இழைத்து உருவாக்கி வருகிறார்.

படம் ஏப்ரலில் வெளிவருகிறது. மாயக்கண்ணாடி செய்யாமல் போன மாயத்தை இந்தப் படம் கண்டிப்பாக செய்யும் என்ற உறுதி சேரனிடம் பளிச்சிடுகிறது. பொக்கிஷம் வேலைகள் இருப்பதால் தனது சிஷ்யன் ஜெகன்நாத்துக்கு நோ சொல்லியிருக்கிறார் சேரன்.

ஜெகன்நாத் தனது ராமன் தேடிய சீதையை தெலுங்கில் ‌‌ரீமேக் செய்கிறார். தமிழில் நடித்த அதே நடிகர், நடிகைகள் தெலுங்கிலும் நடிக்கிறார்கள். பொக்கிஷம் வேலை முடியாமல் இருப்பதால் சேரன் மட்டும் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் வேறு நடிகர் நடிக்கிறார்.

தெலுங்குப் படம் முடிந்த பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்க இருப்பதாக தெ‌ரிவித்தார் ஜெகன்நாத்.

Share this Story:

Follow Webdunia tamil