Publish Date: Fri, 23 Jan 2009 (15:33 IST)
Updated Date: Fri, 23 Jan 2009 (15:33 IST)
முதல் படம், பொய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவதாக நடித்தப் படம், ராமன் தேடிய சீதை. மூன்றாவது படம் பல மைல் தூரத்துக்கு கண்ணில் படவில்லை. விமலா ராமனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ராமன் தேடிய சீதைக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. மோகன்லாலுடன் ஒரு படமும், சுரேஷ் கோபியுடன் ஒரு படமும் நடித்து வருகிறேன். அதுதான் தமிழில் நடிக்க முடியவில்லை என்றார் விமலா ராமன்.
மலையாளத்துடன் தெலுங்கிலும் இவரைத் தேடி வாய்ப்புகள் வருகின்றனவாம். சரி, தமிழ்? இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
தேவதாசி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது விமலா ராமனின் நீண்ட நாள் விருப்பம். தேவதாசி வேடத்தில் நடிக்க யாரேனும் அழைத்தால் ஓடோடிச் சென்று நடிப்பாராம். சம்பளம் எல்லாம் இரண்டாம்பட்சம்தானாம்.
இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.