Publish Date: Thu, 22 Jan 2009 (15:18 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (15:18 IST)
காய்த்த மரம் கல்லடிபடும். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் எனும் தங்கமாக காய்த்து நிற்கிறார். கல்லடிக்கு சொல்லவா வேண்டும்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் சேரிவாழ் மக்களை இழிவுப்படுத்துவதாகவும், படத்தின் பெயர் அம்மக்களை கேவலப்படுத்துவதாகவும் கூறி, பாட்னா நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபோன்று ஒரு சர்ச்சை கிளம்பினால் படத்தின் இயக்குனர் மீதும், தயாரிப்பாளர் மீதும்தான் வழக்கு தொடரப்படும். படத்தின் பெயருக்கும், கதைக்கும் அவர்கள்தான் பொறுப்பு.
ஸ்லம்டாக் மில்லியனர் விஷயத்தில் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நடித்த அனில்கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
படத்தை இயக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். அவர்மீது வழக்கு தொடாந்தால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு சம்பந்தமில்லாத இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இசைப் புயல் இதனை எளிதாக கடந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.