Publish Date: Tue, 13 Jan 2009 (18:05 IST)
Updated Date: Tue, 13 Jan 2009 (18:04 IST)
பெருவில் தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பு சென்னையிலும், வேலூரிலும் தொடர்ந்து நடந்து வந்தது. எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிய பிறகு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்த இயக்குனர் ஷங்கர் தற்போது தனது ஜாகையை திருப்போரூருக்கு அருகிலுள்ள காலவாக்கத்துக்கு மாற்றியுள்ளார்.
இங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கல்லூரியின் கல்சுரல் விழாவுக்கு விஞ்ஞானி ரஜினி வருவது போல காட்சிகள் படமாயின. கல்லூரி மாணவியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்.
படப்பிடிப்பை முன்னிட்டு அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.