Publish Date: Fri, 09 Jan 2009 (15:51 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (14:33 IST)
தெலுங்கு படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்ற வதந்தி சில நாட்களாகவே கோடம்பாக்கத்தை வலம் வந்தது. இதனை நேற்று ஒப்புக் கொண்டார் சத்யராஜ்.
சத்யராஜ் புரட்சித் தமிழன் ஆவதற்கு பல வருடங்கள் முன்பு - சரியாகச் சொல்வதென்றால் 27 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் சில படங்கள் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு வாய்ப்புகள் வந்தும் ஆந்திரப் பிரதேசத்தில் அவரது காலடி பதிந்ததில்லை.
27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். அதுவும் ஹீரோவின் அப்பாவாக. ஏன்?
“இயக்குனர் சிவா சொன்ன கதை அவ்வளவு நன்றாக இருந்தது. கோபிசந்த் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரது அப்பாவாக நான் நடிக்கிறேன். என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதால் நடிக்க ஒத்துக் கொண்டேன்.”
பெருந்தன்மையாக பேசும் சத்யராஜ் சிவாஜி மற்றும் தசாவதாரத்தில் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.