Publish Date: Tue, 06 Jan 2009 (22:37 IST)
Updated Date: Sat, 27 Dec 2008 (17:56 IST)
கேரளத்து வரவான பத்மப்ரியா இயக்குனர் சேரனின் அறிமுகமாக 'தவமாய் தவமிருந்து' படத்தில் நடித்தார். நல்ல பெயரெடுத்தாலும் தொடர்ந்து அதிகப் படட்ஙகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் இயக்குனர் சாமி இயக்கத்தில் 'மிருகம்' படத்தில் நடித்தார். அந்தப் படத்திலும் பெரும் பாராட்டு பெற்றார்.
அதன்பின் சொல்லிக் கொள்கிற அளவுக்கு படங்கள் அமையவில்லை. கிளாமராக சில படங்களில் நடிக்க வேண்டுமென சில தயாரிப்பாளர்கள் அவரை அணுகி கேட்டதற்கு நடிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார். அதன்பின் படங்கள் இல்லாத நிலை வர, தற்போது இந்தி படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார்.
இதற்காக முடிந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்து, சொந்தமாக தன்னை ஸ்டில்ஸ் எடுத்து இந்திப் பட உலக கம்பெனிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் பத்மப்ரியா. அப்படியும் யாரும் அழைப்பு விடுக்காததால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்.