Publish Date: Tue, 06 Jan 2009 (22:23 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (18:08 IST)
பணம் எனக்கொன்றும் பெரிதில்லை, நல்ல நடிகை என்று மக்கள் மத்தியில் பெயரெடுக்க வேண்டும் என்பதில் குறிக்கோளுடன் இருக்கிறார் குத்து ரம்யா.
படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடாமலேயே 'குத்து' ரம்யா என்று பெயரெடுத்துவிட்டார் இவர். இதனால் பலரும் இவரை குத்துப் பாட்டிற்கு ஆடும் நடிகை என்றே நினைத்துவிட்டார்கள்.
சமீபத்தில் கூட விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட வேண்டும் என்று இவரை அணுகி பிரபுதேவா கேட்க, 'நோ' சொல்லிவிட்டார். கேட்கும் தொகை தருவதாக சொல்லியும் மறுத்துவிட்டார்.
மிகுந்த போராட்டத்திற்குப் பின் தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற ஒத்தைப் பாடல் இமேஜை கெடுத்துவிடும் என்பதாலேயே நடிக்க மறுக்கிறார்.
மேலும் 'குத்து' ரம்யா என்ற தனது பெயரை திவ்யா என்று மாற்றியும் பலரும் 'குத்து' ரம்யா என்றே அழைப்பதால் மிகவும் நொந்துபோய் இருக்கிறார். அப்படியென்றால் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.