Publish Date: Tue, 06 Jan 2009 (22:11 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (18:09 IST)
தங்கர் பச்சானின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தர் பிரபுதேவா. தற்போது தன்னுடைய முடிவை அவர் மாற்றியிருக்கிறார்.
ஒன்பது ருபாய் நோட்டு படத்துக்குப் பிறகு தங்கர் பச்சான் இயக்க இருந்த படத்துக்கு ஹீரோ கிடைக்காமல் இருந்தது. மாதவன், சித்தார்த் என பலரை அவர் முயற்சி செய்ததாக செய்திகள் வந்தன. இறுதியில் பிரபுதேவா நடிக்க ஒப்புக் கொண்டார்.
மகனின் மறைவாலும், படம் இயக்க வாய்ப்புகள் குவிவதாலும் தங்கர் பச்சானின் படத்தில் நடிக்க முடியாது என திடீரென மறுத்துள்ளார் பிரபு தேவா. ஜனவரியில் தொடங்குவதாக இருந்த படப்பிடிப்பு இதனால் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.