Publish Date: Tue, 06 Jan 2009 (21:15 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (14:19 IST)
பிரசாந்த் நடிக்க வந்த பிறகு தியாகராஜன் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மகனின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த முடிவு இது.
ஷாக் உள்பட சில படங்களில் மகனுடன் இணைந்து நடித்தவர்; நீண்ட இடைவெளிக்கு பின் மகன் நடிக்காத படம் ஒன்றில் நடிக்க இசைந்துள்ளார். இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் இயக்குனர் சித்திக்.
இவரது புதிய படம் ‘பாடிகாட்’டில் முக்கியமான வேடம் ஒன்றில் தியாகராஜனை நடிக்க கேட்டபோது மறுப்பில்லாமல் ஒத்துக் கொண்டுள்ளார். கேரக்டர் அந்தளவு வெயிட்டானதாம்.
‘பாடிகாட்’டில் திலீப் ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா. இந்தப் படத்தின் கதையைதான் விஜய்யிடம் கூறியிருக்கிறார், சித்திக். விஜய் மறுக்கும் பட்சத்தில் பிரசாந்த நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.