Publish Date: Tue, 06 Jan 2009 (20:26 IST)
Updated Date: Mon, 01 Dec 2008 (14:23 IST)
இன்றும் எம்.ஜி.ஆர்.தான் தமிழ்நாட்டின் வசூல் சக்கரவர்த்தி. வருடத்தின் 365 நாளும் இவரது படம் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக்கொண்டே இருக்கும். கொழுத்த வசூலுடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏம்.ஜி.ஆர். மறைந்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் லட்சோபலட்சம் ரசிகர்களின் ‘வாத்தியாரை’ மறுஉருவாக்கம் செய்கிறது மாய பிம்பம் என்ற அனிமேஷன் நிறுவனம். இனிமே நாங்கதான் என்ற அனிமேஷன் படத்தை எடுத்தவர்கள் இவர்கள்.
எம்.ஜி.ஆரை கிராபிக்ஸில் உருவாக்கி முழுநீள திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தின் பெயர், புரட்சி தலைவன். இந்த அனிமேஷன் படத்தை வெங்கிபாபு இயக்கியுள்ளார். தயாரிப்பு ஸ்ரீதேவிராவ்.
ஒரு இந்திய நடிகரை வைத்து முழுநீள அனிமேஷன் படம் தயாராவது இதுவே முதல்முறை. இந்த விஷயத்தில் ரஜினியின் சுல்தான் தி வாரியரை முந்தியிருக்கிறார், எம்.ஜி.ஆர்.
பிரமிப்பான விஷயம்தான்.