Entertainment Film Featuresorarticles 0811 20 1081120080_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆறு வண்ணங்களில் அத்தியாயம் 6

Advertiesment
சூர்யகிரண் அத்தியாயம் 6
தெலுங்கில் படம் இயக்கிவந்த சூர்யகிரண் முதன்முதலாக தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். யார்யா அது என்று ஆச்சர‌ியப்படுகிறவர்களுக்கு இவர் அறிமுகமான நபர்தான்.

மௌன கீதங்கள் படத்தில் டாடி டாடி ஓ மை டாடி என்று பாடிய அந்த பாலகன் சுரேஷ்தான் இவர். தெலுங்குக்காக பெயரை மாற்றியுள்ளார்.

காசி,சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த காவே‌ரியை திருமணம் செய்த இவர், தனது மனைவி தயா‌ரிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குகிறார்.

ஆறு பகுதிகளாக பி‌ரித்து கதை சொல்வதால் படத்துக்கு அத்தியாயம் 6 என பெயர் வைத்துள்ளனர். சித்திரை செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஆறு பகுதிக்கும் வேறவேறு விதமான லைட்டிங்கை பயன்படுததி வருகின்றனர்.

ஹ‌ரிநாத், பாலா இதில் நடிக்கின்றனர். கணவரைப் போல காவே‌ரியும் தனது பெயரை மாற்றியுள்ளார். இப்போது இவரது பெயர் கல்யாணி.

படப்பிடிப்பை தொடங்கி பாதி படத்தை முடித்தும் விட்டார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil