Publish Date: Wed, 07 Jan 2009 (21:27 IST)
Updated Date: Sat, 15 Nov 2008 (12:08 IST)
பங்சுவாலிட்டி என்றால் லிட்டர் என்ன விலை என்று கேட்பவர் நடிகர் கார்த்திக். கட்சி கூட்டத்தையே மேடையேறும் நிமிஷம் ரத்து செய்வதற்கும் தயங்காதவர் இவர். படப்பிடிப்பில் இவருக்காக காத்திருந்து, நொந்து போகாத தயாரிப்பாளர்கள் குறைவு.
அப்படிப்பட்டவர் சாலக்குடியில் நடக்கும் மணிரத்னத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் ஆஜராகி, யூனிட்டை ஆச்சரியப்படுத்தி வருகிறாராம்.
சாலக்குடியின் அடர்ந்த வனப்பகுதியில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். விக்ரம், பிரபு, கார்த்திக் நடித்து வருகிறார்கள். கார்த்திக் இதில் வனத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.
இயக்குனர் சொல்லும் நேரத்தில் மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுகிறாராம் கார்த்திக்.
அதுதான் தமிழகத்தில் அடை மழையோ?