Publish Date: Wed, 07 Jan 2009 (21:14 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (15:17 IST)
பணத்தை அள்ளி இறைத்து ஐந்தாம்படையை தயாரித்து வருகிறார் குஷ்பு. இது தயாரிப்பாளராக அவருக்கு மூன்றாவது படம்.
பத்ரி ஐந்தாம்படையின் இயக்குனர். சுந்தர் சி நடிக்கும் இப்படத்தின் பிரதான விஷயம் இரண்டு பெண்கள். சிம்ரன், தேவயானி. திருமணமாகி சின்னத்திரையில் செட்டிலான இவர்களின் நீயா நானா போட்டி படத்துக்கு பிளஸ் என்றார் இயக்குனர் பத்ரி.
இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் மோதல்தான் கதையாம். சிம்ரன், தேவயானியின் முறைப்பும், விறைப்பும் அதன் ஹைலைட்.
ஆக்சன் படமென்றாலும் காமெடிக்கு குறைவிருக்காதாம். சுந்தர் சி-யுடன் சேர்ந்து காமெடி ஏரியாவை கலகலக்க வைத்துள்ளாராம் விவேக்.
கைபுள்ளயை மிஞ்சுவாரா?