Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய விருது தண்ணீரில் நனைகிறது!

தேசிய விருது தண்ணீரில் நனைகிறது!
, புதன், 7 ஜனவரி 2009 (21:12 IST)
பாரதிராஜாவின் அறிமுகம். பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது என அற்புதமான வரவாக இருந்த நடிகை ப்ரியாமணி தற்போது நீச்சல் உடையில் நடிக்கிறார் என்றால் கேட்கவே சங்கடமாக இருக்கிறது.

ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. பருத்தி வீரனுக்காக கண்டிப்பாக ஏதேனும் விருது கிடைக்கும் என்றுதான் ப்ரியாமணியை சொந்தக் குரலிலேயே பின்னணி பேசவைத்தார்.

பருத்தி வீரனில் நடித்ததற்குப் பிறகு இதுபோன்று பாவாடை தாவணியில் மேக்கப் இல்லாமல் நடிக்கமாட்டேன். என்னிடம் உள்ள கவர்ச்சியைக் காட்டுவேன். மாடல் ட்ரெஸ் அணிந்து நடிக்கும் கதையாக இருந்தால் மட்டும் சொல்லுங்கள் என்றார்.

அதற்குப்பின் கிடைத்ததுதான் தேசிய விருது. அதை வாங்கிய பின் எனக்கு மிகவும் பொறுப்பு வந்துள்ளது. ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்றெல்லாம் கூறிவந்த அவர் தற்போது தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் 'துரோனா' என்ற படத்துக்காக நீச்சல் உடையில் நடித்து தன் உடல் அழகை நனைத்து காட்டியிருக்கிறார்.

ஒரு வேளை தமிழில்தான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று சொன்னேன், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடிப்பேன் என்பாரோ என்னவோ.

Share this Story:

Follow Webdunia tamil