Entertainment Film Featuresorarticles 0811 12 1081112046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசோகவனத்தால் சோகவனமான நடிகர்!

Advertiesment
மணிரத்னம் அசோகவனம் மாதவன்
, புதன், 7 ஜனவரி 2009 (21:08 IST)
மணிரத்னம் இயக்கும் படங்களில் தொடர்ந்து மாதவனுக்கு வாய்ப்பளித்து வந்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன்தான் ஹீரோ. பின் ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க வைத்தார்.

அதன்பின் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா நடித்து இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இயக்கிய குரு படத்திலும் மாதவனுக்கு ஒரு முக்கியமான கேரக்டரை ஒதுக்கியிருந்தார்.

இப்படி தொடர்ந்து தன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த மணிரத்னம் தற்போது மீண்டும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா நடிக்கும் அசோக வனம் படத்தில் மாதவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

என்ன காரணம் என்று புரியாத மாதவன், சுகாஷினியிடம் போன் செய்து அப்படத்தில் நடிக்க அழைக்காதது குறிதத தன் மன வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

மாதவனும் ஏகப்பட்ட பிஸியில் இருந்தாலும் மணிரத்னம் படத்தில் நடிப்பதை கெளரவமாகவே கருதுகிறார். ஆதனால், அவரின் அழைப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.

Share this Story:

Follow Webdunia tamil