Publish Date: Wed, 07 Jan 2009 (21:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கும் 'லாடம்' படம் கிட்டத்தட்ட முடிவு பெற்று ரிலீசுக்கு தயாரான நிலையில் இருக்கிறது.
இதற்கிடையில் அப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம். இவர் தலைவாசல் என்ற படத்தை தயாரித்தவர்.
பிரபுசாலமன் லாடம் படத்தின் கதையை முதலில் சொன்னது சோழா பொன்னுரங்கத்திட்ம் தானாம். கதை கேட்டவுடன் இயக்குனருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்ததோடு, பல டெக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
அதன்பின் ஏற்பட்ட பைனாக்ஸ் பிரச்சனை காரணமாக படம் தள்ளிப்போக... அதே கதையை காஸ்மோஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஜே.பி. குமார், டி.வி. செளத்ரி ஆகியோரிடம் சொல்லி படத்தையும் ஆரம்பித்துவிட்டார்.
இதனால் கடுப்பான பொன்னுரங்கம் கேஸ் போட, லாடத்தை வெளியிட கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
அதன்பின், படம் நன்றாக வந்திருப்பதால்... ஒரு பெரிய தொகை தருவதாக பேரம் பேச, ஒத்துக்கொண்டு தற்போது வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்திருக்கிறார் பொன்னுரங்கம்.
ஆக லாடத்தின் விலங்கு உடைக்கப்பட்டு விரைவில் ஓட இருக்கிறது.