Publish Date: Wed, 07 Jan 2009 (20:50 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (13:09 IST)
ஆரம்பத்தில் ஆலயம் என்று வைத்த படம்தான் தற்போது 'சாமிடா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் போஸ்டர், ஸ்டில்களைப் பார்க்க கிட்டத்தட்ட பாலா பல வருஷமாய் இயய்கிக் கொண்டிருக்கும் 'நான் கடவுள்' கதை போலவே தெரிகிறது. அப்படியா என்று இப்பட இயக்குனர் வடிவுடையானைக் கேட்டால் இல்லை என்று மறுக்கிறார்.
முக்கியமான சில காட்சிகளை காசியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். அதோடு சாமியார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் காசியில் வாழும் சில போலி சாமியார்கள் பற்றிய உண்மையான முகத்தை படம் பிடித்து காட்டும் படம்தான் இந்த சாமிடா என்கிறார்.
இருப்பினும் சாமியார்கள் என்றால் பெண்கள் பற்றிய விஷயமும் உண்டா? என்று கேட்டால்... படம் பாருங்கள் உங்களுக்கே தெரியும் பெண்களின் பங்கு பற்றி என்று புதிரும் போடுகிறார். அப்படியெல்லாம் பல்வேறு சித்து விளையாட்டுகளும் இடம்பெறும் போலிருக்கிறது. நடத்துங்க... நடத்துங்க.