Publish Date: Wed, 07 Jan 2009 (20:48 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (13:04 IST)
புது கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர் இயக்குனர் சசி. ரோஜா கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்தை அறிமுகப்படுத்தினார். அதற்குப் பின்னால் இயக்கிய டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் அப்படம் வெளிவர கொஞ்சம் தாமதம் ஆனதால் அதை முந்திக்கொண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய சுக்கிரன் வெளிவந்ததால் விஜய் ஆண்டனியின் முதல் படம் சுக்கிரன் ஆனது. அதேபோல் அந்தப் படத்தில் 'பக்ரூ' என்ற குள்ள நடிகரை தமிழில் அறிமுகம் செய்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'பூ' படத்தில் எஸ்.எஸ். குமரன் என்பவரை இசையமைப்பாளராக கொண்டு வந்ததோடு, பார்வதி என்ற கேரளப் பெண்ணை நாயகியாகவும் அறிமுகம் செய்திருக்கிறார்.
அப்படி அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் முன்னேறியுள்ளதால் குமரனும், பார்வதியும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.