Publish Date: Wed, 07 Jan 2009 (20:48 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (17:02 IST)
நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் ராம்கி. இதனால் ராம்கியின் வாசல் தேடி யாரும் போவதில்லை.
சமீபத்தில் சுந்தர் சி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ராம்கியை அணுகினார்கள். தனது ஹீரோ சபதத்தைச் சொல்லி அழைப்பை மறுத்திருக்கிறார் ராம்கி.
முழு ஓய்வில் இருப்பவர் கதை, ஸ்கிரிப்ட் என பொழுதை செலவிடுகிறார். விரைவில் தலையில் தொப்பி வைத்து ஆக்சன், கட் சொல்லத்தான் இந்த முன்தயாரிப்பாம்.
ராம்கியிடம் நல்ல கதையும், முழுமையான ஸ்கிரிப்டும் தயாராக இருக்கிறது. தேவை தயாரிப்பாளர். ராம்கியை நடிக்க அழைப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு இயக்க அழைக்கலாமே!