Publish Date: Wed, 07 Jan 2009 (20:39 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (11:51 IST)
மார்பகம் என்பது பால் கொடுக்கும் ஒரு உறுப்பு. அதையெல்லாம் முடி வைப்பதால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என்று கூறி டாப் லெஸ்சாக படம் எடுத்து பரபரப்பை கிளப்பியவர் வேலு பிரபாகரன்.
காதல் அரங்கம் என்ற அந்தப் படத்தைப் பார்த்த சென்சார் பாதி படத்தை கத்தரித்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என கறாராக கூற, படத்தை மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினார்.
விவரம் தெரியாதவர்கள். வேலு பிரபாகரனின் மார்பக விளக்கத்தை ஏற்றுக் கொள்ள அவர்களும் தயாராக இல்லை. விசால மனம் கொண்டவர்கள் சென்சார் பொறுப்பேற்கும் வரை காத்திருக்க முடியாதே.
அதனால், சென்சார் சொன்ன இடங்களை எல்லாம் கத்தரித்து வெஜிடேரியனாக விரைவில் படம் வெளிவர இருக்கிறது.