Publish Date: Wed, 29 Oct 2008 (14:00 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (13:59 IST)
சிரித்த முகமாக இருக்கும் சிம்ரனை சிம்மமாக கர்ஜிக்க வைத்தது அந்த வதந்தி. வேறொன்றுமில்லை. சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் சிம்ரன், மணிரத்னத்தின் புதிய படத்தில் அவரது அசிஸ்டெண்டாக இருக்கிறார் என்று பலமான பேச்சு.
உண்மையா சிம்ஸ் என பலர் நேரில் விசாரித்ததுடன், பலர் போனில் வாழ்த்தும் கூற கடுப்பாகிவிட்டார் சிம்ரன். இப்பொழுதுதான் சேவல், வாரணம் ஆயிரம் என விட்டதை பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அசிஸ்டெண்ட் டைரக்டர் வதந்தி சிம்ரனை கோபப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.
தற்போது சிம்ரன் திரை சீரியலிலும், டிஎன்-07 ஏஎல் 4777 படத்திலும் பிஸியாக நடித்து வருவதாக தெரிவித்தார். இயக்குனர் ஆசை இருக்கிறது ஆனால் இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான் என்றும் கூறியிருக்கிறார் சிம்ரன்.